அன்புடையீர்,
“ நோயில்லா நீளாயுள் பெற்றிடுவோம் வாரீர்!”
Dr. ரெ. உதயகங்கா பி.எஸ்.எம்.எஸ் Bachalor of Siddha Medicine and Surgery
ஜோதிடத் தம்பதியர் - ஜோதிடவியலில் பல்கலைக்கழகப் பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற ஜோதிடக் கலைமாமாணி திரு நா. ரெங்கன் எம்.ஏ., டி.டி.எட்., டி. அஸ்ட்ரோ, திருமதி உஷா ரெங்கன் பி.ஏ., (அஸ்ட்ரோ) டி. அஸ்ட்ரோ தம்பதியரது புதல்வி, டாக்டர் ரெ. உதயகங்கா பி.எஸ்.எம்.எஸ் Bachalor of Siddha Medicine and Surgery ஐந்தரை ஆண்டு அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் முறையான கல்வியும் பயிற்சியும் பயின்று - ஜோதிடவியலுடன் மிக நெருங்கிய தொடர்புடைய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத அனுபவம் பெற்றுள்ள பராம்பரிய மருத்துவராம் எமது தந்தையார் திரு கே.எஸ். நாராயண அய்யர் - திருமதி விசாலாட்சி நாராயணய்யர் தம்பதியரது பூரண நலலாசியுடன் பாளையங்கோட்டையில் துவங்கியுள்ள சுவாதி சித்த மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைய அன்புடன் அழைக்கிறோம்!!..
டாக்டர் ரெ. உதய கங்கா BSMS., Dip. in. Panchakarma அவர்களை இமெயில் மூலம் ( uthayaganga1987@yahoo.com, tamiljoshier@gmail.com, usharengan@hotmail.com. mailto:joshier_urrao@yahoo.com)) முகவரியில் தொடர்பு கொண்டு பயனுள்ள ஆலோசனைகள் பெற்றிடுங்கள்..
குறிப்பு
தத்தம் ஜாதக ரீதியில் உள்ள சுகஸ்தானம், ரோகஸ்தானம், ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட கோள்களை அவரவர் ஜாதகத்தில் உள்ளவாறு ஆராய்நது. இன்னவருக்கு இன்ன வயதில் இன்ன மாதிரியான நோய் பாதிப்பு வரக்கூடும் என்பதை ஆராய்ந்து, அந்த வழியில் வருமுன் காத்திடத் தகுந்த சித்த மருத்துவ, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றிடுங்கள். நன்றி!!
மாதம் ஒரு மூலிகை அறிவோமா..
அந்த வரிசையில் “கீழாநெல்லி”
தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை கீழாநெல்லியாகத்தான் இருக்கும் .மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி என்று பலரும் இலவச வைத்திய முறை மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டதும் கூறுவார்கள் . ஆனால் அணுபான முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது .கீழாநெல்லி மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகைமருத்துவத்தில்பயன்படுகின்றது.நமது சித்தர்கள் தமது சித்தத்தை அடக்கி ,ஞானத்தை பெருக்கி உடம்பை வளர்த்துஉயிரை வளர்க்கும் உபாயத்தை நமக்கு அன்புடன் விட்டுசென்றுள்ளனர் .ஆனால்நாம் ஆங்கிலேயரின் ஆட்ச்சியில் இருந்தபோது இததகைய பாரம்பரிய உயர் மருத்துவ முறைகளை உதாசீனப்படுத்திவிட்டோம் .அவைகளை தொகுத்து வைக்க மறந்து விட்டோம் பல்லாயிரக்கணக்கான ஒலைச் சுவடிகள் படிஎடுக்கப்படாமல்ஆடிப்பெருக்கில் ஆற்றினில் விடப்பட்டது ..சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவதுமூலிகைகள்தான். மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம் இல்லை என்றே கூறலாம். ஒவ்வரு உள்ளுருப்பையும் பாதுகாக்க ஒவ்வரு மூலிகைகைகளை நமது சித்தர்கள் நமக்குகாட்டிச்சென்றுள்ளனர் . சிறுநீரகத்தைக் காக்கும்.சிறுநீரகத்துக்கு ஏற்ற சிறுபீளை, நெருஞ்சில் , அதியமான் நெடுநாள் வாழ ஒளவை வழங்கிய ஆயுள் காக்கும் நெல்லி மற்றும் அதன் வகைகள், ஆண்மைக் குறைவைப் போக்கும் பூனைக்காலி, கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கப் பயன்படும் அசோக மரம், புற்று நோயைப் புறக்கணிக்க உதவும் கொடிவேலியும் , நித்திய கல்யாணியும் ,இதயத்திற்கு செம்பருத்தி மூளைக்கு வல்லாரை என இவ்வாறு வகைப்படுத்தி உள்ளனர் .இதில் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு கீழாநெல்லிதான் காக்கும்நண்பன். மிகக் கொடிய நோய்களுக்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில்இருந்தாலும்கூட, முதலில் வேர் பாரு ,தழை பாரு மிஞ்சினா மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரு' என்பது சித்தர்களின் வழி .
ஜோதிட தம்பதி
உஷா ரெங்கன்
மருத்துவர் ரெ. உதயகங்கா.
