திருமணங்கள் அதிக நம்பிக்கையுடனும்-இறையுணர்வுடன்



அன்புடையீர்! இங்கு தமிழகத்தில் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் முடிவு செய்வது தொன்று தொட்டு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தான் இங்கு நடைபெறும் திருமணங்கள் அதிக நம்பிக்கையுடனும்-இறையுணர்வுடன் காலம் காலமாக புஷ்டியான தம்பதியராக நற்புத்திரப்பேறு பெற்று சிறப்பு பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சி ஒரிரு பகுதியில் மிகச் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்ட திருமணப் பொருத்தங்கள் தற்காலத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்டு வருகிறது, இதன் காரணமாக நடக்கும் பல்வேறு குழப்பஙகளால்-அந்த ஒரு தம்பதியருக்கு நடைபெறும் சிறு சிறு பிணக்குகள் ஒட்டுமொத்தி குடும்பங்கள் மட்டுமின்றி இருபுறமும் உள்ள பல்வேறு உறவினர்களின் வாக்கு வாதங்களுடன் சிலசமயம் சட்டரீதியான முறையீடுகள் வைர வந்து விடுகிறது, எனவே நல்லனவற்றை நாம் ஓதுக்குதல் ஆகாது. இது தொடர்பான கட்டுரையை இங்குள்ளவர்கள் மட்டுமின்றி உலகத்தினர் அனைவரும் அறியவேண்டுமென்ற ஆவலில் இங்கு பிரசுரமாகியுள்ள கட்டுரை ஒன்றினை இத்துடன் அனபுடன் அறியத் தருகிறோம். நன்றி!!

0 comments: