தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அண்மையில் எழுதியவை

எழுதியவை அனைத்தும்

வாசகர் கருத்துக்கள்



அன்புடையீர்,
“ நோயில்லா நீளாயுள் பெற்றிடுவோம் வாரீர்!”
Dr. ரெ. உதயகங்கா பி.எஸ்.எம்.எஸ் Bachalor of Siddha Medicine and Surgery
ஜோதிடத் தம்பதியர் - ஜோதிடவியலில் பல்கலைக்கழகப் பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற ஜோதிடக் கலைமாமாணி திரு நா. ரெங்கன் எம்.ஏ., டி.டி.எட்., டி. அஸ்ட்ரோ, திருமதி உஷா ரெங்கன் பி.ஏ., (அஸ்ட்ரோ) டி. அஸ்ட்ரோ தம்பதியரது புதல்வி, டாக்டர் ரெ. உதயகங்கா பி.எஸ்.எம்.எஸ் Bachalor of Siddha Medicine and Surgery ஐந்தரை ஆண்டு அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் முறையான கல்வியும் பயிற்சியும் பயின்று - ஜோதிடவியலுடன் மிக நெருங்கிய தொடர்புடைய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத அனுபவம் பெற்றுள்ள பராம்பரிய மருத்துவராம் எமது தந்தையார் திரு கே.எஸ். நாராயண அய்யர் - திருமதி விசாலாட்சி நாராயணய்யர் தம்பதியரது பூரண நலலாசியுடன் பாளையங்கோட்டையில் துவங்கியுள்ள சுவாதி சித்த மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைய அன்புடன் அழைக்கிறோம்!!..
டாக்டர் ரெ. உதய கங்கா BSMS., Dip. in. Panchakarma அவர்களை இமெயில் மூலம் ( uthayaganga1987@yahoo.com, tamiljoshier@gmail.com, usharengan@hotmail.com. mailto:joshier_urrao@yahoo.com)) முகவரியில் தொடர்பு கொண்டு பயனுள்ள ஆலோசனைகள் பெற்றிடுங்கள்..
குறிப்பு
தத்தம் ஜாதக ரீதியில் உள்ள சுகஸ்தானம், ரோகஸ்தானம், ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட கோள்களை அவரவர் ஜாதகத்தில் உள்ளவாறு ஆராய்நது. இன்னவருக்கு இன்ன வயதில் இன்ன மாதிரியான நோய் பாதிப்பு வரக்கூடும் என்பதை ஆராய்ந்து, அந்த வழியில் வருமுன் காத்திடத் தகுந்த சித்த மருத்துவ, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றிடுங்கள். நன்றி!!
மாதம் ஒரு மூலிகை அறிவோமா..
அந்த வரிசையில் “கீழாநெல்லி”
தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை கீழாநெல்லியாகத்தான் இருக்கும் .மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி என்று பலரும் இலவச வைத்திய முறை மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டதும் கூறுவார்கள் . ஆனால் அணுபான முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது .கீழாநெல்லி மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகைமருத்துவத்தில்பயன்படுகின்றது.நமது சித்தர்கள் தமது சித்தத்தை அடக்கி ,ஞானத்தை பெருக்கி உடம்பை வளர்த்துஉயிரை வளர்க்கும் உபாயத்தை நமக்கு அன்புடன் விட்டுசென்றுள்ளனர் .ஆனால்நாம் ஆங்கிலேயரின் ஆட்ச்சியில் இருந்தபோது இததகைய பாரம்பரிய உயர் மருத்துவ முறைகளை உதாசீனப்படுத்திவிட்டோம் .அவைகளை தொகுத்து வைக்க மறந்து விட்டோம் பல்லாயிரக்கணக்கான ஒலைச் சுவடிகள் படிஎடுக்கப்படாமல்ஆடிப்பெருக்கில் ஆற்றினில் விடப்பட்டது ..சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவதுமூலிகைகள்தான். மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம் இல்லை என்றே கூறலாம். ஒவ்வரு உள்ளுருப்பையும் பாதுகாக்க ஒவ்வரு மூலிகைகைகளை நமது சித்தர்கள் நமக்குகாட்டிச்சென்றுள்ளனர் . சிறுநீரகத்தைக் காக்கும்.சிறுநீரகத்துக்கு ஏற்ற சிறுபீளை, நெருஞ்சில் , அதியமான் நெடுநாள் வாழ ஒளவை வழங்கிய ஆயுள் காக்கும் நெல்லி மற்றும் அதன் வகைகள், ஆண்மைக் குறைவைப் போக்கும் பூனைக்காலி, கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கப் பயன்படும் அசோக மரம், புற்று நோயைப் புறக்கணிக்க உதவும் கொடிவேலியும் , நித்திய கல்யாணியும் ,இதயத்திற்கு செம்பருத்தி மூளைக்கு வல்லாரை என இவ்வாறு வகைப்படுத்தி உள்ளனர் .இதில் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு கீழாநெல்லிதான் காக்கும்நண்பன். மிகக் கொடிய நோய்களுக்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில்இருந்தாலும்கூட, முதலில் வேர் பாரு ,தழை பாரு மிஞ்சினா மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரு' என்பது சித்தர்களின் வழி .
ஜோதிட தம்பதி
உஷா ரெங்கன்
மருத்துவர் ரெ. உதயகங்கா.


வறுமையை நீக்கி வாழ்க்கையில் வளம் சேர்க்கும் வழிகள்

அன்பார்ந்த சான்றோர்களே! சகோதர சகோதரிகளே, நண்பர்களே, மாணவ மாணவியர்களே, அனைவருக்கு அன்பு வணக்கங்கள்.!!

வறுமையை நீக்கி வாழ்க்கையில் வளம் சேர்க்கும் வழிகள் என்ற தலைப்பில் நெல்லை மாலைமுரசு இணைப்பில் வெளி வந்த எங்கள் சிறுகுறிப்பாக கட்டுரை பிரசுரமாகியுள்ளது மகிழ்வுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறோம். நன்றி. ஜோதிட தம்பதி. நன்றி..! எல்லாம் நிறைவாகட்டும்!!! வாழ்க வளமுடன்!!!!..



VASTHU HINTS வாஸ்து குறிப்புகள்


கிழக்கு .. குடிநீர் ஆதாரம்.

தென் கிழக்கு .. சமையலறை

தெற்கு ... இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை

மேற்கு .. சந்தததியர் படுக்கை அறை

வடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை

வடக்கு ... குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்துக் கொள்ளும் படியாக அமைக்கவும்.

வடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.

மேற்குறிப்பிட்ட விளக்கங்களுடன், மனையில் உள்ள அறைகள் கீழ்க்கண்டவாறு உள்கூடு அளவுகள் அமைத்து (நீள அகலங்கள்) சிறப்பாக செயல்பட வேண்யுள்ளது. அதாவது

அடி பலன்.. கடவுள் அருள் கிடைக்கும் வீட்டில் சுபிட்சம் பொங்கும். செல்வமும், போகமும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும், நிறைந்திருக்கும்

8 அடி பலன்

வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். உயர்ந்த பதவிகள் கிட்டும். பொருளாதார நிலை மிக வேகமாக உயர்ந்துவிடும். தெய்வ அருள் உண்டு.

10 அடி. பலன் பொருளாதார நிலையில் சரிவு என்பதே ஏற்படாது. செல்வநிலை மேலும், மேலும் உயர்ந்து கொண்டே போகும். எதிர்பாராத வகையில் பொருள் வரவு ஏற்படும். திடீர் யோகம் உண்டு.

11 அடி பலன்எந்த காரியத்திலும் தோல்வி என்பதே ஏற்படாது. வெற்றிக்கு மேல் வெற்றியாகக் குவியும். குடம்பத்தில் குதூகலம் நிலவும் செல்வ நிலை உயரும்.

16 அடி பலன்

சமுதாயத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். பொருளாதார நிலை மிக வேகமாக உயரும் பலவகையான பொருள்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

17 அடி பலன்

தொழில் அல்லது வியாபாரத்தில் நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிரிகளை எளிதாக வீழ்த்த முடியும். எந்த காரியத்திலும் வெற்றி காணலாம்.

20 அடி பலன்

பண்ணைத் தொழிலில் சிறப்பான லாபம் ிகடைக்கும். பல கைகளிலும் வருமானம் பெருகும். உ்லாசமான வாழ்க்கை அமையும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

21 அடி பலன்

வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. எல்லா முயற்சிகளிலும் வெற்றியே கிடைக்கும். பொரளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பொன்னும பொருளும் சேரும்.

22 அடி பலன்

மனதில் தைரிய உணர்வு மேலோங்கி யிருக்கும். எதிரிகளின் சதித் திட்டங்களை எளிதாக முறியடிக்க முடியும், வீண் பழிகள் வேகமாக அகலும்.

26 அடி பலன்

உற்சாகமும், உல்லாசமும் நிறைந்த வாழ்க்கை அமையும். போகமும் யோகமும் தேடிவரும். பொருளாதர நிலை செழித்தோங்க, பொன்னும் பொருளும் சேரும்.

27 அடி பலன்

பொது வாழ்க்கையில் புகழும் செல்வாக்கும கிட்டும். பலரும் வலிய வந்து, உதவி செய்வார்கள். அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் தேடிவரும்.

8 அடி பலன்

கடவுள் அருள் உண்டு. வேதனைகளும், துன்பங்களும். விலகி ஓடும். இன்பமாக வாழக்கை அமைக்க எல்லா முயற்சிகளிலும எளிதாக வெற்றி கிட்டும்.

29 அடி பலன்

பண்ணைத் தொழிலில் பால் வியாபாரம் ஆகியவற்றில் நிறைந்த லாபம் கிட்டும். வாழ்க்கயைில் சிறந்த முன்னேற்றங்களைக் காணலாம். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

30 அடி பலன்

புத்திர பாக்கியம் தாராளமாக இரக்கும். எதிர்பாராத சொத்துக்கள் கிட்டும். திடீர் யோகம் உண்டு. பொருளாதார நிலை மகவும சிறப்பாக இருக்கும்.

31 அடி பலன்

நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வார்கள். தீயவர்கள் விலகியோடுவார்கள். பொன்னும் புகழும் கிட்டும். வாழ்க்கையில் உயர்வான நிலை உண்டாகும் காரியசித்தி உண்டு.

பொதுவாக வீடு கட்டும் தாய், தந்தை மூத்த சகோதரர், ஆசிரியர், மூத்த உறவினர்கள் வாழும் பகுதிக்கு வடக்கு திசையிலும், கிழக்குத் திசையிலும், தான் மனை வாங்க வேண்டும்.. என்பது சாஸ்திரங்கள் கூறும் கருத்தாகும்.

வீட்டின் பகுதிகள்
அலுவலக அறை வடமேற்கு திசை

புத்தக அறை தென்மேற்குத் திசை

சமையல் அறை தென் கிழக்குத் திசை

உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை

படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்

பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்

குளியல் அறை கிழக்கு திசை

சேமிப்பு அறை வடக்கு திசை.

கழிவறை வட மேற்கு திசை.

குறிப்பு அன்புடையீர், இது சாதாரண குறிப்புகள். தத்தம் ராசி மறறும் பிறந்த நேர நட்சத்திரம் மற்றும் ஜாதக அமைப்பின் அடிப்படையில் வருங்காலம் வளம் பெறத் தகுந்த வாஸ்து அமைப்புடன் நாம் வாழந்து வருகிறோமா.. சிறு சிறு குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்து கொண்டு, குறிப்பாக, வீட்டில் உள்ள அனைவரின், ஆரோக்கியம், கல்வி, வேலை, பணி, திருமணம் மற்றும சிறப்பான முன்னேற்றங்கள் காண தயவு செய்து அணுகுக. நன்றி.



நவராத்திரி என்றாலே, கல்வித் திருநாளாய் கொண்டாடிடும் குழந்தைகளுக்கு ஓர் உன்னத ஆலோசனை..
டாக்டர் ரெ. உதயகங்கா BSMS., Dip. in Panchakarma., அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு, சகல வியாதிகளுக்கும் நல்ல அனுகூலமான, வீட்டு வைத்திய முறைகளையும், பழங்கால சித்தர்கள் முறையிலான ஆச்சரியமான மருத்துவ குணங்களை உடைய பல்வேறு மூலிகை மற்றும், அன்றாட பயன்பாட்டில் உள்ள வீட்டுச் சமையல் பொருட்களையும் முக்கிய உணவு பழக்க வழக்கங்களையும் எளிதாய் எடுத்துரைத்து, மனச் சுமையோடு, உள்ள, உடல் ஆரோக்கிய குறைபாடுகளை களைய நல்லாலோசனைகள் நாளும் வழங்கி வருகிறார்கள். அவர்கள் இந்த நவராத்திரியில்..
வித்யா பூஜைக்கென பேட்டியளித்த துணுக்குச் செய்தி இதோ!.. கவனமாய் படிப்போம்..நம் வீட்டுக் குழந்தைகளின் கல்வி அறிவு வளர அத்தகு முறைகளை கடைபிடிப்போம்.. வாழக் வளமுடன். நன்றி.

நவராத்திரியில்.. கல்வி சிறக்க .. ஜோதிட - டாக்டர் அட்வைஸ்.!.
பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகளை தங்களின் அதிக பட்ச ஆசைகளை நிறைவேற்றும் ரோபாக்களாக பார்க்காமல், வளரும் பருவத்தில் தனக்கே உரிய, ஓடி, ஆடி விளையாடுத்ல், சுதந்திரமாக பேச, சிந்தித்து செயல்பட அனுமதி அளிக்கலாமல்லவா..
குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் வெற்றிக் கனிகளை அள்ளிக் குவிக்க முடியும். உடலும் மனமும் நல்ல நிலையில் இருப்பதே முழுமையாக ஆரோக்கியத்தைக் குறிக்கும். மனதி்னை பலப்படுத்த ”உன்னால் முடியும்” ”நீ சாதிப்பாய்” போன்ற நேர்மறையான சொற்களைக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். நம்பிக்கையான பெற்றோர்களின் பேச்சு, தெளிவான சிந்தனை, குறிக்கோளுடன் கூடிய திட்டமும் – செயல்படுத்துதலும் சரியான வழிமுறை இருந்தால் மட்டும் சாதிக்க முடியும். ” வாழ்ந்து பார்க்கத் தான் வாழ்க்கை ” என்பதை மற்நது விடக்கூடாது. வாழ்க்கை ஜெயித்துக் காட்டதான் எனவும், தேர்வு போ்னறவை நியாயமான போராட்டங்கள் என்பதையும் உணர வைக்க வேண்டும்.
தற்காலத்தில் குழந்தைகளுக்கு கேட்டது கேட்ட மாத்திரத்தில் பெற்றோர்களின் சக்திக்கு மிஞ்சியதாக இருந்தாலும், கிடைக்கச் செய்கிறார்கள். இதனால், தாங்கள் நினைத்தவைகள் அனைத்துமே கிடைத்தே தீர வேண்டும் என பிடிவாதத்துடன் இருக்கப் பழகிக் கொள்கின்றன குழந்தைகள்!. நினைத்ததற்கு மாறாக சிறு தோல்வி ஏற்பட்டாலும், மனச் சோர்வு தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு தவறான முடிவுகளுக்கு முயற்சி செய்து இன்னல்களைத் தானே உருவாக்கிக் கொள்கின்றனர்.
ஆலமரம் இருக்கிறது.. நன்றாக வேரூன்றி பக்கக் கிளைகளுடன் பார்ப்பதற்கு பெரிதாக இருந்த போதும், பெரும புயலில் அம்மரம் முழுவதுமாக சரிவதில்லையா.. ஆனால் நாணல் இருக்கிறது.. எத்தகைய புயல், மழை மற்றும் இயற்கை சீற்றங்களையும் வளைந்து கொடுத்து சமாளிப்பதில்லையா..
இவற்றிற்குள்ள தன்மைகளை குழந்தைகளுக்கு விளக்குவதோடு, நாம் எடுக்கின்ற முடிவுகளும். திடமாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் வளைந்து கொடுத்து தனக்கு கேடு தராமலும் இருக்க வேண்டும் என்ற எண்ணஙக்ளையும் அறிவுரை மூலம் உருவாக்க வேண்டும்.
உடலை வன்மைப் படுத்தவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும சித்தர்கள் அருளிய அறிவுரைகள்
சூரிய உதயத்திற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்து நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் யோகாசனம் செய்து குறிப்பாக, ஏக பாத ஆசனம், பத்மாசனம், சிரசாசனம், யோகமுத்ரா போன்ற ஆசனங்களுககு கூடுதல் கவனம் செலுத்தி, வலிமை பெறலாம்.

ஞான முத்திரையை தினமும், காலை மாலை 20 நிமிடம், செய்ய வேண்டும். ஞான முத்திரை என்பது, நன்கு அமர்ந்து கொண்டு, குரு விரலை (ஆள்காட்டி விரல் ) கட்டை விரலின் நுனிப் பகுதியைத் தொடுமாறு வைத்து விட்டு விட்டு அழுத்தம் தர வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். வல்லாரை, பிரமி ஆகிய மூலிகை மருந்துகளை அளவறந்து கொடுக்கலாம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கலாகாது.
இப்படிச் செய்வதால், நினைவாற்றல் – மனதை ஒருமுகப் படுத்தும் திறன் – டென்ஷன் நீங்கி அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் கிடைப்பதோடு முதன்மை மாணவ மாணவியாக திகழ்ந்து, பெற்றோரையும், பயிற்றுவிக்கும் ஆசிரிய ஆசிரியைகளையும் மகிழ்விக்கச் செய்லாம் என்பதில் ஐயமில்லை.. மாலை நேரங்களில் ”சினாக்ஸ்” என்ற வகையில், உணவாக மநதத் தன்மையை ஏற்படுத்தும் எண்ணெயப் பதார்த்தங்களை விலக்கி, குழந்தைகளின் ஜாதகத்தின் கிரகநிலைக்கேற்ப, அவர்தம் ஜாதகத்தில் கண்டுள்ள கல்வி, உயர்கல்வி, சிறப்புக்கல்வி ஆகிய இடங்களில் உள்ள ஆதிபத்தியம் காரகத்துவத்திற்கேற்ப, உரிய தெய்வத்தை பூஜிப்பதோடு, நைவேத்யமாக, சத்துள்ள தானியங்களை (முக்கியமாக தன் ஜாதகத்திற்கு ஏற்ற) உட்கொள்ள தெயவ பலம் கிட்டுவதோடு, உடலுக்குத் தேவையான புரதமும் கிடைக்கிறது. கலைவாணி கருணை அருள் கிடைத்தால் எல்லா வகையிலும் காரியசித்தி பெற்று வளமுடன் வாழலாம்.
மேலும் விவரமறிய – டாக்டர் ரெ. உதயகங்கா BSMS., மற்றும் ஜோதிட தம்பதி உஷாரெங்ன், சுவாதி சித்த மருத்துவ ஜோதிட ஆலோசனை இயக்கம், 24A சிவன் கோவில் மேல ரத வீதி, பாளை. தொ.பேசி. 2586300, கைபேசி 9442586300, 9443423897.

அன்புடையீர்,
வணக்கம்.
கோள்களின் சஞ்சாரங்களினால், பஞ்ச பூதங்களான, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றில், நன்மையும், தீமையும் கலந்த மாறுபாடுகள் நிகழ்வது இன்றைய நாளில் பல்வேறு கோணங்களில், விஞ்ஞான ரீதியாகக் கூட பழங்கால சித்தர்களின் ஆராய்ச்சிக் கூற்றுகளைத் தொடர்ந்து ஆய்வு நடததி நிரூபிக்கப்பட்டு வருகிறது என்பது உலகறிந்த பொருளாகும்.

இந்த ஆண்டு விரோதி ஆண்டாகி, இந்த ஆண்டில், மெதுவாக நகரும் கோள்கள் எனப் பெயர் பெற்று, மெதுவாக நகர்வதன் பொருட்டு, நல்லதையும், கெட்டதையும் அவரவர் ராசி கிரகநிலைகளின் படி, கொடுத்தும், கெடுத்தும் தத்தம் உண்மை நிலைகளை உணர்த்தும் பொருட்டு, நான்கு முக்கிய கிரகங்களான, சனி, ராகு-கேது, குரு ஆகிய பெயர்ச்சியின் தினங்கள் கீழே கொடுத்துள்ளோம். அவரவர் ராசி மற்றும் நட்சத்திர, பிறந்த நாள், நேரம் ஆகியவை குறிப்பிட்டு, வருங்காலத்துள் சுமார் ஒரு ஆண்டு முதல் இரண்டரை ஆண்டு வரை ஏற்படும மாற்றங்களைத் தெரிந்து கொள்ள அணுகுங்கள். தங்களுக்கு, ஆலோசனைகளையும், உரிய பரிகார விளக்கங்களையும் அள்ளித் தருகிறோம். தங்கள் காணிக்கையை அனுப்பி தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

நடப்பு விரோதி ஆண்டில், மெதுவாக நகரும் கோள்கள் எனப்படும் முக்கிய கோள்களின் உங்களுக்கு, நானகு கோள்களின் பெரய்ச்சியும் என்ன பலனைத் தரும் என்பதைக் குறிப்பிட்டு அதற்குரிய பரிகாரங்களையும் தெரிவிக்க உரிய காணிக்கை அனுப்பி பலன் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம். நன்றி.

இராசி மாற்றங்கள் முறையே --

”சனிப் பெயர்ச்சி” சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சி விரோதி ஆண்டு புரட்டாசி மாதம் 10 ம் நாள் (26-09-2009) சனிக் கிழமை அதிகாலை பெயர்ச்சி

”ராகு பெயர்ச்சி” விரோதி வருடம் ஐப்பசி மாதம் 10 ம் தேதி ( 27-10-2009) செவ்வாய்க்கிழமை மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு (அதாவது பின்னங்கால் வழியாக வருவது - Anti-Clockwise Movement ) பெயர்ச்சி

”கேது பெயர்ச்சி” விரோதி வருடம் ஐப்பசி மாதம் 10 ம்தேதி (27-10-2009) செவ்வாய்க்கிழமை கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்குப் பெயர்ச்சி.

குரு பெயர்ச்சி” விரோதி வருடம் கார்த்திகை மாதம் 29 ம்நாள் (15-12-2009) செவ்வாய்க கிழமை மகரத்திலிருந்து கும்பத்திற்குப் பெயர்ச்சி.
தங்கள் அன்புள்ள,
ஜோதிட தம்பதி ஜோதிட கலைமாமணி உஷா ரெங்கன்.




அன்புடையீர்,

வணக்கம். ஒவ்வொருவரின் உடல்நிலை ஆரோக்கியம், கல்வி, வேலை, பதவி உயர்வு, திருமணம், குழந்தைப்பேறு, வாழ்க்கைத் துணையின் பரஸ்பர அன்பும் அனவிந்யமும், எதிர்கால் வாழ்க்கைக்கு உரிய மூலதனச் சேர்க்கை ஆகியவை நிர்ணயிப்பது யார்? குழந்தையாக பிறந்த ஒவ்வொருவரும், பிறந்த முதல் நாளில் துவங்கும், படிப்படியான வளர்ச்சி உடல் வளர்ச்சி, உள்ள வளர்சசி, ஆன்ம வளர்ச்சி ஆகியவைகளின் அடிப்டிடையில் நல்ல வளர்ச்சி காண உதவுவது எது? யார்?

பெற்றோரும் - உற்றாரும் - அண்டை அயலாரும் - நண்பர்களும் - வாழ்க்கைத் துணையும் என ஒவ்வொரு சூழ்நிலைகளிலும், ஒவ்வோரிடத்தில் பெறும் உதவிகளும், அவர்களும் தயங்காமல் உதவுவதும் எதன் அடி்பபடையில்? எல்லா கேள்விகளுக்கும் ஒரே விடை ” கோள்களின் சஞ்சாரம் தான்” என அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே அனைவரும தத்தம் ஜாதக, நட்சத்திர, ராசி. லக்னம் ஆகியவற்றின் அடிப்படையில், அவ்வாறு நடப்பு விரோதி ஆண்டில் என்ன என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என அறிந்து கொள்ள அழையுங்கள் (00) +919443423897 அல்லது இமெயில் செய்யுங்கள் e-mail: tamiljoshier@gmail.com நன்றி.. நன்றி!!..


நவக்கிரஹ ஸ்லோகம்
சூரிய காயத்ரி
அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !!
சந்திர காயத்ரி
நிசாகராய வித்மஹே! கலாநாதாய தீமஹி!!
தந்நோ ஸ்சந்த்ர ப்ரசோதயாத்!!
அங்காரக காய்த்ரீ
அங்காரகாய வித்மஹே! பூமி பாலாய தீமஹி!1
தந்நோ குஜ ப்ரசோதயாத்!!
புத காயத்ரீ
ஆத்ரேயாய வித்மஹே! இந்து புத்ராய தீமஹி!!
தந்நோ புத ப்ரசோதயாத்!!
குரு காயத்ரி
ஆங்கீரஸாய வித்மஹே! சராசார்யாய தீமஹி!!
தந்நோ குரு ப்ரசோதயாத்!!
சுக்கிர காயத்ரி
ராஜதாபாய வித்மஹே! ப்ருகு கதாய தீமஹி!!
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!!
சனி காயத்ரி
பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!
ராகு காயத்ரி
ஸூக தந்தாய வித்மஹே! உக்ரரூபாய தீமஹி!!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!!
கேது காயத்ரி
சிதர வர்ணாய வித்மஹே! ஸர்பரூபாய தீமஹி!!
தந்நோ கேது ப்ரசோதயாத்!!

அன்புள்ள ஆன்மீக அன்பர்களுக்கும், எங்கள் அன்பின் இதயத்துள் நிறைந்திருக்கும் சான்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ மாணவியர்க்கும், தன் சீரிய பணியின் நிமித்தம் வருங்கால சமூகத்தை வழிநடத்தும் ஆசிரிய, மருத்துவ, வேத, ஜோதிட, விஞ்ஞானப் பணியாற்றும் மிக மிக முக்கிய அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.


சிற்சில இயற்கைச் சீற்றங்கள் நம்மை ஆட்டிப்படைக்கத் தான் இருக்கின்றன. எனவே மேற்குறித்த நவக்கிரக காயத்ரீ தினமும் சுத்தமாக இருந்து உச்சாடனம் செய்து வர எத்தகு தீமைகளும் விலகி நமக்கு நன்மை ஓன்றே கிடைக்கும் அருள் கிட்டுவதாக!.
ஜோதிட தம்பதி உஷா ரெங்கன்.
http://www.tamil-astrology.com/
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com.












தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

மறுமொழிகள்

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை